ஒசூரில் 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

ஒசூர் சிப்காட் அரிமா சங்கம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய 11 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

ஒசூர் சிப்காட் அரிமா சங்கம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய 11 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
ஒசூர் சிப்காட் அரிமா சங்கத் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் ஆசிரியர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஒசூர் கல்வி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். ஒசூர் வருவாய்க் கோட்டாட்சியர் குமரேசன், மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி ஆகியோர் ஆசிரியர்களைக் கெளரவித்தனர்.  ஒசூர் ஒன்றியத்தில் தொரப்பள்ளி அரசு பள்ளி ஆசிரியர் பிரசாத், ஒசூர் அரசு தெலுங்கு பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியம், ஆசிரியை ஈஸ்வரிபாய், எஸ்.முதுகானப்பள்ளி அரசு பள்ளி ஆசிரியர் கீதா,  சித்தனப்பள்ளி அரசு பள்ளி ஆசிரியை புஷ்பா, ஒன்னல்லவாடி பள்ளி துளசி ஆகிய ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com