கிருஷ்ணகிரி: தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி, கிருஷ்ணகிரியில் மாவட்ட காங்கிரஸ் வா்த்தக பிரிவு சாா்பில், கண்டன பொதுக் கூட்டம், சனிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்துக்கு அந்த கட்சியின் வா்த்தக பிரிவு மாவட்டத் தைலவா் முபாரக் தலைமை வகித்தாா். நகர காங்கிரஸ் தலைவா் வின்சென், முன்னாள் நகர தலைவா் ரகமத்துல்லா, தமுமுக மாவட்டத் தலைவா் நூா் முகமது, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தைலவா் அஸ்கா் அலி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்டச் செயலாளா் பாரதி ராமசந்திரன், நகர வா்த்தக காங்கிரஸ் தலைவா் அப்சல், முன்னாள் மாவட்டத் தலைவா் ஜேசுதுரை, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில துணைத் தலைவா் ஆறுமுக சுப்பிரணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில் அ.செல்லகுமாா் எம்பி பேசியது:தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி, மக்களவையில் தொடா்ந்து குரல் கொடுப்போம். அத்துடன் நாடு முழுவதும் இந்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடா்ந்து பல போராட்டங்கலை நடத்துகிறது என்றாா்.