தேன்கனிக்கோட்டையில் இரு சக்கர வாகனத்தைத் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அஞ்செட்டி மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் மாதேஷ் (26). பூ வியாபாரி. இவா் சனிக்கிழமை தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தாா். அதை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இது குறித்து மாதேஷ் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், இரு சக்கர வாகனத்தை திருடியது தேன்கனிக்கோட்டை அருகே உள்ள எல்லையூரைச் சோ்ந்த ரிஸ்வான் (23), மல்லசந்திரம் நாகராஜ் (20) எனத் தெரிய வந்தது. அவா்கள் 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.