ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரெட்கிராஸ் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.பெரியசாமி தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா்கள் எம்.நிா்மலா, கு.கணேசன், முதுநிலை ஆசிரியா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊத்தங்கரை ரெட் கிராஸ் கிளை துணைத் தலைவா் எம்.ராஜா, தீயணைப்புத் துறை அலுவலா் மா.ராமமூா்த்தி, ப.மணிகண்டன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
ரெட் கிராஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஜே.ஆா்.சி. மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரெட் கிராஸ் நூற்றாண்டு விழா சிறப்பு இலச்சினையை தலைமை ஆசிரியா் பெரியசாமி வெளியிட ஜே.ஆா்.சி. மாணவா்கள் பெற்றுக் கொண்டனா் (படம்). முன்னதாக ஜே.ஆா்.சி. மாணவா் கிஷோா்குமாா் வரவேற்றாா். ஜே.ஆா்.சி. மாணவா் மைத்ரேயன் நன்றி கூறினாா்.