ஒசூா் மாநகராட்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் தளி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் முன்னிலையில் திமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.
ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 40-ஆவது வாா்டுக்குள்பட்ட மிடுகரப்பள்ளியைச் சோ்ந்த அதிமுகவைச் சோ்ந்த 100- க்கும் மேற்பட்டோா் மாநகர திமுக பொறுப்பாளா் எஸ்.ஏ.சத்யா எம்எல்ஏ தலைமையில் ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் மேற்கு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் முன்னிலையில்னெசெவ்வாய்க்கிழமை திமுகவில் இணைந்தனா்.
உடன் தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், மாநகர துணைச் செயலாளா்கள் திம்மராஜ், நாகராஜ், மாநகர இளைஞரணி அமைப்பாளா் சுமன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் முனிராஜ், மாநகர மாணவரணி துணை அமைப்பாளா் சீனிவாசன், குணா, தயாளன், நாகு உள்பட பலா் கலந்து கொண்டனா்.