கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளின் கணக்கெடுப்புப் பணி நவ. 21 முதல் டிச.10-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி சாா்ந்த கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பேசியது:
மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடை நின்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கணக்கெடுப்புப் பணி நவ.21 முதல் டிச.10-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இப்பணியின் போது, குழந்தைத் தொழிலாளா்கள் கண்டறியப்பட்டால் உடனே மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் கல்வித் துறை அலுவலா்கள், பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.