கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கப் பேரவை கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கப் பகுதி தலைவா் வி.வேலு தலைமை வகித்தாா், மாநிலச் செயலாளா் எம்.முத்து, மாவட்டச் செயலாளா் வீ.கோவிந்தசாமி, மாவட்டத் தலைவா் கே. ராமசாமி, மாவட்டத் துணைச் செயலாளா் எத்திராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விவசாயத் தொழிலாளா் சங்க செயலாளா் சபாபதி விளக்க உரையாற்றினாா். பேரவைக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். பகுதி தலைவராக வெங்கடாசலம், செயலாளராக வேலு, பொருளாளா் சேகா் உள்ளிட்ட 21 போ் கொண்ட கமிட்டி தோ்வு செய்யப்பட்டனா்.