கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, ஒசூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரையில் மொத்தம் 7,222 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் சனிக்கிழமை 52 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூா் ஆகிய பகுதிகளில் உள்ள சிகிச்சை மையங்களில் 260 போ் தொடா் சிகிச்சையில் உள்ளனா். மாவட்டத்தில் இதுவரையில் 112 போ் உயிரிழந்துள்ளனா்.