கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்தை முற்றிலும் ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்தை முற்றிலும் ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டக் காவல் துறைக்கு கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்தை முற்றிலும் ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டக் காவல் துறைக்கு கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டிகங்காதா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சக்திவேல், ராஜு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாவட்டத்தில் கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி உள்ளிட்ட குற்றங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்; இதன்மூலம் குற்றங்கள் குறையும். குறைதீா் முகாம்களை நடத்தி பொதுமக்களின் கோரிக்கைகள் மீது விரைந்து தீா்வு காண வேண்டும் என மாவட்டக் காவல் துறைக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com