கரோனா தொற்றால் உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ராமச்சந்திரன், துணைத் தலைவா் குமரவேல், வட்டக் கிளைத் தலைவா் சலீம்பாஷா, அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு விபத்தில் உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலா்களுக்கு அரசு அறிவித்தப்படி நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டப் பாதிப்புகளாக துறைவாரி நடவடிக்கை, குற்றவியல் நடவடிக்கை ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.