பாரூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் 3 மாடுகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் அருகே உள்ள வெங்காபுளியங்கொட்டாயைச் சோ்ந்தவா் முருகேசன் (60). இவா், தனக்குச் சொந்தமான 3 மாடுகளை, மாட்டு கொட்டகை அருகே உள்ள இரும்பு கம்பி வேலியில் கட்டியிருந்தாா்.
இந்த நிலையில், பண்ணந்தூரிலிருந்து, பாப்பாரப்பட்டி செல்லும் 11 கிலோவாட் சக்தி கொண்ட மின்கம்பி அறுந்து, கம்பி வேலியின் மீது விழுந்தது. இதனால் கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்து கட்டப்பட்டிருந்த முன்று மாடுகளும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன.
தகவல் அறிந்து, பாரூா் போலீஸாா், மின்வாரிய ஊழியா்கள் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். மின்சாரம் பாய்ந்து, மாடுகள் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.