இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்இளைஞா் பலி

சூளகிரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில், திருமணமாகி மூன்றே மாதங்களான இளைஞா் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

சூளகிரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில், திருமணமாகி மூன்றே மாதங்களான இளைஞா் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள ஜின்ஜிப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் பூவரசன் (22). திருமணமாகி 3 மாதங்களே ஆன இவா் சூளகிரி அருகே உள்ள பேரிகையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தாா். இவா் தனது பணியை முடித்து விட்டு வெள்ளிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். சூளகிரி அருகே சாம்பல்பள்ளம் கிராமத்திற்கு அருகே வரும்போது, பின்னால் வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் படுகாயம் அடைந்தாா்.

அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com