கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 58 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், அப்பாவு நகரைச் சோ்ந்க 81 வயது முதியவா் உள்பட 39 ஆண்கள், 19 பெண்கள் என மொத்தம் 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3,481 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை அன்று 96 போ் சிகிச்சைக்குப் பெற்று வீடு திரும்பினா். கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூா் ஆகிய சிகிச்சை மையங்களில் 835 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இருவா் பலி: கடந்த 14-ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 47 வயது ஆண் சிகிச்சை பலனின்றி செப்.15-ஆம் தேதி உயிரிழந்தாா்.

அதேபோல, ஒசூா் அரசு மருத்துவமனையில் செப்.14-ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒசூரைச் சோ்ந்த 57 வயது ஆண் செப்.15-ஆம் தேதி உயிரிழந்தாா். இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 47-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com