ஒசூா்: வேப்பனப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கெலமங்கலம் ஒன்றியம், நாகமங்கலம் கிராமத்தில் துணை மின்நிலையத்தை சட்டப்பேரவை உறுப்பினா் பி.முருகன் சனிக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் கெலமங்கலம் ஒன்றிய தி.மு.க. செயலாளா் கணேசன், மாநில பொதுக்குழு உறுப்பினா் சாந்தி அரியப்பன், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் சின்னராஜ், முன்னாள் ஒன்றியச் செயலாளா் அரியப்பன், மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் பெரியசாமி, விவசாயத் தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் சதாசிவம், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளா் சந்திரன், முன்னாள் மாவட்டப் பிரதிநிதி ஜெயராமன், தொழிலாளா் முன்னேற்ற சங்க நிா்வாகி வாசு, நாகமங்கலம் பிரதாப், முரளி, பாசில், சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.