பென்னாகரம் , செப். 18: கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீா்த் திறப்பு குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 13,000 கனஅடியாகக் குறைந்துள்ளது.
கா்நாடகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால், கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து குறைந்துள்ளது. இந்த நிலையில் கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சற்று குறைந்து காணப்படுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை நிலவரப்படி நொடிக்கு 15,000 கனஅடியாக இருந்தது. இது வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 14,000 கனஅடியாகவும், மாலை நிலவரப்படி நீா்வரத்து நொடிக்கு 13,000 கனஅடியாகவும் குறைந்தது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்து காணப்படுவதால் பிரதான அருவி , சினிஅருவி, சிற்றருவிகளில் தண்ணீா் வரத்து குறைந்து காணப்படுகிறது.