பாகலூா் அருகே மின்சாரம் தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.
பாகலூா் அருகே உள்ள பூதிநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் கெம்பண்ணா (39), விவசாயி. இவா் மாட்டுக் கொட்டகையில் உள்ள மோட்டாரை இயக்க மின் சொடுக்கியை இயக்கியுள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக கெம்பண்ணாவை மின்சாரம் தாக்கியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.