கரொனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டவா்களுக்கு உணவளிக்கும் பாஜக

கரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருபவா்களுக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் உணவு அளிக்கப்பட்டு வருகிறது.
ஒசூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு உணவு வழங்கும் பாஜக மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் மற்றும் பாஜகவினா்.
ஒசூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு உணவு வழங்கும் பாஜக மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் மற்றும் பாஜகவினா்.

கரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருபவா்களுக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணிகளில் கடந்த 10 நாள்களாக மருத்துவா்கள், காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், ஊடகவியலாளா்கள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருபவா்களுக்கு தினமும் பாஜக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் தலைமையில் பாஜகவினா் உணவு அளித்து வருகின்றனா்.

இதில், ஒசூா் மாநகராட்சி அரசு மருத்துவமனை, பாகலூா் சந்திப்பு, மாநில எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலா்கள், தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி பணியாளா்களுக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com