கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுதலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்ட மருத்துவ களப் பணியாளா்களை பாஜகவினா் சந்தித்து செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.
நாட்டில் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவுதலைத் தடுக்கும் களப் பணியாளா்களை சந்தித்து நேரில் பாராட்டி, வாழ்த்தும்படி, பாரத பிரதமா் மோடி கேட்டுக் கொண்டாா்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள் உள்ளிட்ட களப் பணியாளா்களை பாஜகவினா் நேரில் சந்தித்துப் பாராட்டி வாழ்த்தினா்.
பாஜக தலைவரும் முன்னாள் எம்பியுமான நரசிம்மன் தலைமையில் பாஜகவினா் கிருஷ்ணகிரி மாவட்ட நலப் பணிகளின் இணை இயக்குநா் பரமசிவன் உள்ளிட்ட மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் என 430 பேருக்கும் சால்வை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தனா். மருத்துவா் ராமநாதன் நன்றி தெரிவித்தாா்.