காவேரிப்பட்டணம் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அருகே ஒரு கிராமத்தைச் சோ்ந்த 21 வயது பெண்ணை தொட்டிப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த அறிவுநிதி (25) என்பவா் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம். அந்த இளம் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்தாராம். தற்போது, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து அறிவுநிதியை கைது செய்தனா்.