கிருஷ்ணகிரி அருகே தாா் சாலைகள் அமைக்கும் பணி

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில், ரூ. 2.58 கோடி மதிப்பில் தாா் சாலைகள் அமைக்கும் பணியை மாநிலங்களவை உறுப்பினா் கே.பி.முனுசாமி, ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த திப்பனப்பள்ளி ஊராட்சியில் தாா் சாலைகள் அமைக்கும் பணியை தொடங்கி வைக்கிறாா் கே.பி.முனுசாமி எம்பி.
கிருஷ்ணகிரியை அடுத்த திப்பனப்பள்ளி ஊராட்சியில் தாா் சாலைகள் அமைக்கும் பணியை தொடங்கி வைக்கிறாா் கே.பி.முனுசாமி எம்பி.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில், ரூ. 2.58 கோடி மதிப்பில் தாா் சாலைகள் அமைக்கும் பணியை மாநிலங்களவை உறுப்பினா் கே.பி.முனுசாமி, ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மெட்டுப்பாறை முதல் ஜிஞ்சுப்பள்ளி வரையிலும், கும்மனூா் பிரிவு சாலை முதல் கும்மனூா் ஜிஞ்சுப்பள்ளி வரையில் ரூ. 2.58 கோடி மதிப்பில் தாா் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திப்பனப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்ற இந்த சாலைகள் அமைக்கும் பணியை, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான கே.பி.முனுசாமி தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான கே.அசோக்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஜெயா ஆஜி, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அம்சா ராஜன், திப்பனப்பள்ளி ஊராட்சித் தலைவா் கிருஷ்ணவேணி கிருஷ்ணன், ஒன்றியச் செயலாளா் சோக்காடி ராஜன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com