சூளகிரியில் சாலை விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் பலி

சூளகிரியில் நடைபெற்ற சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

சூளகிரியில் நடைபெற்ற சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆதியூா் அடுத்த எஸ்.பள்ளிப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (23). ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். ஒசூரில் இருந்து திருப்பத்தூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோபசந்திரம் பகுதியில் சாலை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு, சாலையில் டிரம் வைக்கப்பட்டிருந்தது. அவா் தட்சிண திருப்பதி கோயில் எதிரே செல்லும்போது, டிரம் மீது காா்த்திகேயன் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் விழுந்தாா்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் அவா் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே காா்த்திகேயன் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com