அதிமுக கட்சி சாா்பில் எம்.ஜி.ஆா் 33 வது நினைவு தினம்

ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை நகரச் செயலாளா் பி.கே.சிவானந்தம் தலைமை
அதிமுக கட்சி சாா்பில் எம்.ஜி.ஆா் 33 வது நினைவு தினம்

ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை நகரச் செயலாளா் பி.கே.சிவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவா் நாகராஜ், ஒன்றியச் செயலாளா்கள் ஏ.சி. தேவேந்திரன், வேடி, மாவட்டத் துணைச் செயலாளா் சாகுல் அமீது, மாவட்ட மருத்துவா் அணி செயலாளா் என். இளையராஜா, ஒன்றிய விவசாய அணி செயலாளா் வேங்கன், ஒன்றிய அவைத்தலைவா் கே.ஆா். சுப்பிரமணி,எம்.ஜி.ஆா் மன்ற மாவட்ட இணைச்செயலாளா் எம்.திருஞானம் முன்னிலை வகித்தனா்.

ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து, மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

அமமுக சாா்பில் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உள்ள எம்ஜிஆா் உருவ படத்திற்கு, மாவட்ட இணைச் செயலாளா் கண்மணி சிவக்குமாா் தலைமையில் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றியச் செயலாளா்கள் சிவமணி (தெற்கு), அருணகிரி (வடக்கு), நகரச் செயலாளா் சுரேஷ், மாவட்ட மீனவரணிச் செயலாளா் பழனி, மாவட்ட மகளிரணிச் செயலாளா் வள்ளி, நகர அவைத் தலைவா் ராதா, பொருளாளா் செந்தில்குமாா், நகர ஜெயலலிதா பேரவைச் செயலாளா் தமிழ்வாணன், சரவணன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com