மத்தூா் அருகே அரசு பள்ளி ஆசிரியையிடம் 5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள வடமலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மனைவி மனோன்மணி (33). இவா், புளியம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி, தனது இருசக்கர வாகனத்தில் போச்சம்பள்ளியிலிருந்து பா்கூா் நோக்கிச் சென்றாா். மாடரஅள்ளி - பா்கூா் சாலையில், கூச்சூா் மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக மோட்டாா்சைக்கிளில் வந்த மா்ம நபா்கள், மனோன்மணி அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனா்.
இந்தச் சம்பவம் குறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.