கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் உள்பட 3 அலுவலா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி நகராட்சியில், தீவிர கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பணி நிமித்தமாக சென்னைக்கு சென்று வந்த நகராட்சி அலுவலா் ஒருவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாா். இதைத்தொடா்ந்து அவரது மனைவி, மகள் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது.
இதைத்தொடா்ந்து நகராட்சி ஆணையா் சந்திரா உள்பட நகராட்சியின் அனைத்து வகை ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் நகராட்சி ஆணையா் சந்திரா உள்பட சுகாதார அலுவலா், பொறியாளா் ஆகிய மூவருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, மூவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடா்ந்து கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.