கிருஷ்ணகிரியில் செயல்படும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் இன்று (திங்கள்கிழமை) ஒருநாள் தங்கள் பயிலும் கல்லூரியை நிர்வகித்தனர்.
அறிவியல் கல்லூரியில் உள்ள 9 துறைகள், கல்வியியல் கல்லூரியில் உள்ள எட்டு துறைகளில் உடற்கல்வி இயக்குனராகவும், நூலகம் ஆய்வக நுட்பநராகவும் மாணவர்கள் செயல்பட்டனர். கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராக பி.காம் மூன்றாம் ஆண்டு பயிலும் எம். சத்தியமூர்த்தியும், கல்வியியல் கல்லூரியின் முதல்வராக எஸ். சங்கீதாவும் செயல்பட்டனர்.
கல்லூரியை நிர்வகித்த மாணவ மாணவிகளுக்கு கல்விக் குழுமத்தின் நிறுவனர் சி. பெருமாள், தலைவர் வள்ளி பெருமாள் மற்றும் முதல்வர்கள் நிர்வாக அலுவலர் ஆகியோர் வழிகாட்டினர்.