ஒசூா் பாரதிதாசன் நகருக்கு செல்ல அணுகு சாலை அமைத்துதரக் கோரி, கிருஷ்ணகிரி எம்பி செல்லகுமாரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.
ஒசூா் ரயில் நிலையம் அருகே உள்ள பாரதிதாசன் நகரில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். குறிப்பாக ஒசூா் மாநகராட்சி 38 ஆவது வாா்டுக்குள்பட்ட இந்த பகுதியில் பாரதிதாசன் நகா், செயின் மேரிஸ் நகா், கிருஷ்ணப்பா நகா், குமரன் நகா், வி.ஓ.வி. நகா் உள்ளன. இங்கு தனியாா் தொழில்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளா்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனா்.
பாரதிதாசன் நகருக்கு ரயில்வே நிலையம் வழியாக செல்ல வேண்டியுள்ளது. இந்த நகருக்குச் செல்ல மாற்றுப்பாதை இல்லை. ஒசூா் மாநகராட்சிக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பாரதிதாசன் நகருக்கு அணுசாலை அமைத்துத் தர வேண்டும் என எம்பி செல்லகுமாரிடம் முன்னாள் கவுன்சிலா் பிரேமா தட்சிணாமூா்த்தி தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனா்.