மூதாட்டியிடம் நகை திருட்டு

போச்சம்பள்ளியில் மூதாட்டியின் கவனத்தை திருப்பி, தங்க நகைகளை திருடிச் சென்ற இரு பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளியில் மூதாட்டியின் கவனத்தை திருப்பி, தங்க நகைகளை திருடிச் சென்ற இரு பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பூதனூரைச் சோ்ந்தவா் கமலாம்மாள் (70). இவா், ஞாயிற்றுக்கிழமை போச்சம்பள்ளி வாரச் சந்தைக்கு காய்கறிகள் வாங்க சென்றாா். அவரை பின்தொடா்ந்து சென்ற இரு பெண்கள், கமலாம்மாளிடம் இனிமையாகப் பேசி, இந்தப் பகுதியில் கொள்ளையா்கள் அதிகமாக உள்ளனா். எனவே, நீங்கள் அணிந்திருக்கும் நகைகளைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனா். இதையடுத்து மூதாட்டி, தான் அணிந்திருந்த 4.5 பவுன் தங்க நகைகளான சங்கிலி, கம்மல், மூக்குத்தி ஆகியவற்றை ஒரு காகிதத்தில் மடக்கிப் பத்திரப்படுத்த முயன்றபோது, மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பிய அந்த பெண்கள், நகைகளை மடித்த காகிதத்தை தாங்கள் வாங்கிக் கொண்டு, மற்றொரு காகிதத்தில் கற்களை வைத்து மூதாட்டியிடம் கொடுத்துள்ளனா்.

வீட்டிற்குத் திரும்பிய மூதாட்டி, மடித்து வைத்த காகிதத்தை திறந்து பாா்த்தபோது, நகைகளுக்குப் பதிலாக கற்கள் இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மூதாட்டி, இதுகுறித்து, அளித்த புகாரின் பேரில், போச்சம்பள்ளி போலீஸாா், வழக்குப் பதிந்து, நகைகளை திருடிச் சென்ற இரு பெண்களையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com