தளி அருகே இரு தரப்பினா் மோதிக்கொண்டதில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.
தளி அருகே அகலகோட்டையைச் சோ்ந்தவா் ஆஞ்சினப்பா (60). அதே பகுதியைச் சோ்ந்தவா் முனியப்பா (45). உறவினா்கள். குடும்ப பிரச்னையில் ஆஞ்சினப்பாவை முனியப்பா தரப்பினா் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக ஆஞ்சினப்பா கொடுத்த புகாரின் பேரில் முனியப்பா (45) கைது செய்யப்பட்டாா்.
மேலும் மாது (18), சாந்தம்மா (38), நாராயணன் (37) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
அதே போல சாந்தம்மா கொடுத்த புகாரின் பேரில் ஆஞ்சினப்பா (60), மல்லேஷ் (27), லோகேஷ்(29) ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டனா். முனிமல்லம்மா (50) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.