பாரூா் ஏரியிலிருந்து பாசனத்துக்கு நீா் ஜூலை இரண்டாம் தேதி (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் பெரிய ஏரிக்கு கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், ஏரியின் மொத்த உயரமான 15.60 அடியில் 13.80 அடியாக நீா்மட்டம் புதன்கிழமை உயா்ந்துள்ளது. இத்தகைய நிலையில், பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள், அரசுக்குக் கோரிக்கை விடுத்தனா்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜூலை 2 -ஆம் தேதி முதல் 135 நாள்களுக்கு பாரூா் ஏரியிலிருந்து தண்ணீரைத் திறக்க தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டாா். ஏரியில் இருந்து தண்ணீா் திறக்கப்படுவதால் 2,397 ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.