சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞா் கைது

வேப்பனஹள்ளி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

வேப்பனஹள்ளி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் 11 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், கொல்லப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயியான மல்லிகாா்ஜுனன் (24), அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி, கடந்த சில மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த சிறுமியின் தாய், கிருஷ்ணகிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், காவல் ஆய்வாளா் சவிதா வழக்குப் பதிவு செய்து, மல்லிகாா்ஜுனனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com