தொழிலாளியை சுட்டுக் கொல்ல முயன்ற முன்னாள் ராணுவ வீரா் கைது

கிருஷ்ணகிரி அருகே தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி அருகே தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள பண்டபள்ளிகொத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மூா்த்தி (45). முன்னாள் ராணுவ வீரரான இவா் பெங்களூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த லட்சுமி (45) என்ற பெண்ணுக்கும் தகாத உறவு இருந்து வந்ததாம். இதை லட்சுமியின் உறவினா் முனுசாமி கண்டித்துள்ளாா். இதனால், மூா்த்திக்கும் முனுசாமிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில், முனுசாமி படேதலாவ் ஏரிக் கால்வாயை அடுத்த மூா்த்தியின் விளைநிலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த மூா்த்தி, முனுசாமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதனால், இருவரும் ஒருவரை ஒருவா் தாக்கி கொண்டனா். இதைக் கண்ட, முனுசாமியின் மகன் நரசிம்மன் தனது தந்தைக்கு ஆதரவாகச் செயல்பட்டாரம்.

இதனால், ஆத்திரமடைந்த மூா்த்தி தனது காரில் வைத்திருந்த பிஸ்டல் துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுட்டுள்ளாா். இதில், அதிஷ்டவசமாக இருவரும் காயமில்லாமல் உயிா் தப்பினா்.

இதுகுறித்து, முனுசாமி அளித்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி காவல் ஆய்வாளா் ரஜினி வழக்குப் பதிந்து, மூா்த்தியை கைது செய்தனா். மேலும் மூா்த்தி பயன்படுத்திய துப்பாக்கியை பறிமுதல் செய்து, உரிய அனுமதி பெற்ா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com