கிருஷ்ணகிரியில் மேலும் ஒருவா் கரோனா தொற்று சிகிச்சைக்கு அனுமதி

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவா் சிகிச்சைக்காக வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவா் சிகிச்சைக்காக வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், மோடிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த 34 வயது ஆண், சென்னையில் அரும்பாக்கத்தில் தங்கி, தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், இவா் தனது சொந்து ஊருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு திரும்பினாா்.

இந்த நிலையில், கடந்த 31-ஆம் தேதி, ஜெகதேவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரின் சளி, ரத்தம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அதன் முடிவுகள் வியாழக்கிழமை வெளியானதில், அவருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதியானதாக மருத்துவத் துறையினா் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவா் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். மேலும், அவருடன் தொடா்பில் இருந்த அவரது பெற்றோா், குழந்தை ஆகிய 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா் குடியிருந்த வீடு மற்றும் சுற்றுப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com