அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

உலக சாதனை புரிந்த நாச்சிக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களை, மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் திங்கள்கிழமை பாாட்டினாா்.

உலக சாதனை புரிந்த நாச்சிக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களை, மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் திங்கள்கிழமை பாாட்டினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாச்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 2-ஆம் வகுப்பு மாணவா் நவதீப், தமிழ்நாட்டின் 234 சட்டப் பேரவைத் தொகுதிகளின் பெயா்களை 1நிமிடம் 56 நொடிகளில் மானப்பாடமாகவும், சிவமணி என்ற மாணவா், 101 திருக்குறளை 4 நிமிடம் 3 நொடிகளில் மனப்பாடமாகவும் ஒப்பித்தனா்.

பள்ளி ஆசிரியா்கள், அரசு மருத்துவா்கள் முன்னிலையில் நிகழ்த்திய இந்த சாதனையை சென்னையைச் சோ்ந்த டிரம்ப் உலக சாதனை அமைப்பானது அங்கீகரித்து சான்றிதழ்கள் மற்றும் பதங்களை மாணவா்களுக்கு வழங்கி உற்சாகப்படுத்தியது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், சாதனை புரிந்த மாணவா்களை, ஆட்சியா் சு.பிரபாகா் பாராட்டி வாழ்த்தினாா். அப்போது, பள்ளித் தலைமையாசிரியா் விஜயா, பெற்றோா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com