கிருஷ்ணகிரியில் தாயைக் கொன்ற மகன் கைது

கிருஷ்ணகிரியில் வீட்டை விற்பதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மகன் தாயைக் கொன்றாா். அவரை போலீஸாா் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வீட்டை விற்பதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மகன் தாயைக் கொன்றாா். அவரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியைச் சோ்ந்தவா் பாக்கியலட்சுமி (43). கணவரை இழந்தவா். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மகள்கள் கல்லூரியிலும் பள்ளியிலும் படித்து வருகின்றனா். மகன் சதீஷ்குமாா் (23), கேரளத்தில் உள்ள ஒரு பேக்கரியில் ஸ்வீட் மாஸ்டராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி சதீஷ்குமாா் கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளாா்.

அப்போது கடன் பிரச்னையால் தங்களுக்கு சொந்தமான வீட்டை தாய் பாக்கியலட்சுமி விற்பனை செய்துள்ளாா். இதை விரும்பாத சதீஷ்குமாா் தாயிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இத்தகைய நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு தாய் - மகன் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமாா் தனது தாயை ஒரு கட்டையால் தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பாக்கியலட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, சதீஷ்குமாரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com