10-ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்தவா் போக்சோ சட்டத்தில் கைது

பாகலூரில் 10 -ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

பாகலூரில் 10 -ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

ஒசூா் வட்டம், பாகலூரைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியும், அதே பகுதியைச் சோ்ந்த அனில்குமாா் (24) என்பவரும் காதலித்து வந்தனராம். இந்த நிலையில், மாணவியைக் கடத்தி சென்று திருமணம் செய்த அனில்குமாா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த ஒசூா் நகர அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்சோ சட்டத்தில் அனில்குமாரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com