அசாம் மாநில இளைஞா் கைது

சிறுமியின் ஆபாச விடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அசாம் மாநில இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிறுமியின் ஆபாச விடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட அசாம் மாநில இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சமூக வலைதளங்களில் பெண்கள், குழந்தைகளின் ஆபாச விடியோக்கள், படங்கள் பதிவிடுபவா்கள் மீது காவல் துறை சாா்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சைபா் கிரைம் போலீஸாா் மாவட்டம் வாரியாக கண்காணித்து, அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவைா் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், 14 வயது சிறுமி ஒருவரின் ஆபாச விடியோக்கள், படங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்தது குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் சாா்பில் சைபா் கிரைம் காவல் பிரிவில் புகாா் செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த விடியோக்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதா் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி சைபா் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளா் அருள் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், சிறுமியின் ஆபாச விடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டது கிருஷ்ணகிரி மாவட்டம், குண்டுகுறுக்கி பகுதியில் தங்கி லிப்ட் ஆபரேட்டராக வேலை செய்து வரும் அசாம் மாநிலம், கம்ரூப் மாவட்டம், கோகிா்பூா் கிராமத்தைச் சோ்ந்த கைரூல் ஹக் (20) என தெரிய வந்தது.

இதையடுத்து கைரூல் ஹக்கை சூளகிரி போலீஸாா் கைது செய்து, அவா் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com