கிருஷ்ணகிரி அருகே உள்ள ஸ்ரீ ருக்குமணி, ஸ்ரீ சத்யாபாமா சமேத கிருஷ்ணன் கோயிலில் கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெற்ற மண்டல பூஜையில், கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் மிா்திங்க யாகம் மற்றும் பால்குட ஊா்வலம் நடைபெற்றது. காளியம்மன் கோயிலிருந்து தொடங்கிய பால்குட ஊா்வலம், காட்டிநாயனப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி வழியாகச் சென்றது. தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆதாரதனைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.