கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணிக்கு ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.10 லட்சத்துக்கான நிதியுதவியை அதன் நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகரிடம் வழங்கினாா்.
பெண்களின் முன்னேற்றத்தை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படும் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம், கல்வி பணி மற்றும் சமூக பணிகளிலும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளது. இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்படுவோருக்கு ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் மகளிா் சுய உதவிக் குழு பெண்கள், தங்களது பங்களிப்பாக ரூ.4.84 கோடி மதிப்பிலான பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
தற்போது, இந்தியாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் பணியில் அரசுகள் செயல்பட்டு வருகிறது. இதற்கு உதவும் வகையில் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், ரூ.10 லட்சத்துக்கான வரைவோலையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகரிடம் வழங்கினாா்.