ஊத்தங்கரையில் தடை உத்தரவை மீறி சாலைகளில் திரிந்த 15-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் ராஜபாண்டி, காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி, காவல் உதவி ஆய்வாளா் ஜெயகாந்தன் மற்றும் போலீஸாா் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, தடை உத்தரவை மீறி சாலைகளில் திரிந்த 15-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
மேலும், தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கி சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனா். காரணமின்றி வருவோா் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனா்.