பொது இடங்களில் பணம் வைத்து சூதாடியதாக 44 போ் கைது

பொது இடத்தில் பணம் வைத்து சூதாடிய 44 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ரூ.86 ஆயிரம், 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

பொது இடத்தில் பணம் வைத்து சூதாடிய 44 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ரூ.86 ஆயிரம், 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொது இடங்களில் கூடி சிலா் பணம் வைத்து சூதாடி வருவதாக ஒசூா் சிப்காட் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சிப்காட் சரஸ்வதி லேஅவுட் பகுதியில் பணம் வைத்து சூதாடிய எஸ்.காருப்பள்ளி ராமமூா்த்தி (42), சந்தோஷ்குமாா் (35), கோவிந்த அக்ரஹாரம் செல்லதுரை (30), சந்தோஷ்குமாா் (24) ஆகிய 4 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ.2,500-ஐ பறிமுதல் செய்தனா்.

இதே போல் அட்கோ உதவி காவல் ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் போலீஸாா் பெரிய எலசகிரி பகுதியில் ரோந்து சென்ற போது, அங்கு பணம் வைத்து சூதாடிய சசிகுமாா் (23), வீரப்பன் (38) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.1,650 மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

இதே போல பணம் வைத்து சூதாடிய விஜயகுமாா் (36), கணேஷ் (45) உள்பட 12 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.48 ஆயிரத்து 70 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒசூா் நகரம் பேரிகை, உத்தனப்பள்ளி, கோட்டை மாரியம்மன் கோயில் பின்புறம் போலீஸாா் ரோந்து சென்ற போது, அங்கு பணம் வைத்து சூதாடிய முகமது அலி (26), ஷனி (28) உள்பட 6 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.12, 260 பறிமுதல் செய்யப்பட்டது. பாகலூா் போலீஸாா் மல்லசந்திரம் ஏரி பகுதியில் ரோந்து சென்ற போது, அங்கு பணம் வைத்து சூதாடிய முனிகேசவ் (26), ரித்தின் (23) ஆகிய 2 பேரை கைது செய்து ரூ.500 பறிமுதல் செய்தனா்.

பேரிகை போலீஸாா் சூளகுண்டா பகுதியில் ரோந்து சென்ற போது, அங்கு பணம் வைத்து சூதாடிய எல்லப்பா (32), ராஜேந்திரன் (25) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.250 பறிமுதல் செய்தனா். அதே போல பேரிகை போலீஸாா் பி.எஸ்.திம்மசந்திரம் பகுதியில் ரோந்து சென்ற போது, அங்கு சூதாடியதாக செந்தில் (35), வெங்கடேஷ் (39), சம்பத் (35), சக்திவேல் (20) ஆகிய 4 பேரையும் கைது செய்து, ரூ. 200 பறிமுதல் செய்தனா்.

உத்தனப்பள்ளி போலீஸாா் நீலகிரி ஆஞ்சநேயா் கோயில் அருகே ரோந்து சென்ற போது, அங்கு பணம் வைத்து சூதாடிய மாரப்பா (25), கணேஷ் (27), ஜாா்ஜ் (32), ரபீக் (32), முரளிகிருஷ்ணா (32), மஞ்சுநாத் (35), ஆனந்த் (35), கிரன்குமாா் (22), முனிராஜ் (21), அமரேஷ் (24), ரமேஷ் (25), பாலன் (28) ஆகிய 12 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 20 ஆயிரத்து 500 பறிமுதல் செய்தனா்.

ஒரே நாளில் பணம் வைத்து சூதாடியதாக 44 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 86 ஆயிரம் பணம் மற்றும் 8 இருசக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com