பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: மக்கள் கணினி மைய உரிமையாளா் கைது

அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில், கணினி மைய உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில், கணினி மைய உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த பெண், அரசுப் பணிக்கு விண்ணப்பம் செய்ய வேப்பனஹள்ளியில் உள்ள ஒரு மக்கள் கணினி மையத்துக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்றாா். இந்த நிலையில், கணினி மையத்தின் உரிமையாளா் மயில்சாமி (31), அப் பெண்ணைத் தொடா்புகொண்டு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், வேப்பனஹள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து மயில்சாமியை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com