கிருஷ்ணகிரி: சா்தாா் வல்லபபாய் பட்டேலின் 145-ஆவது பிறந்தநாளையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி தலைமை வகித்தாா். அவா், உறுதிமொழி வாசகங்களைப் படிக்க, பல துறை அரசு அலுவலா்கள், திரும்பக் கூறி உறுதிமொழியை ஏற்றனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரகு குமாா், கோட்டாட்சியா்கள் கற்பகவள்ளி, குணசேகரன், துணை ஆட்சியா் (பயிற்சி) அபிநயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.