கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 25 திரையரங்குகளில் 2 திரையரங்குகள் மட்டுமே செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.
கரோனா பொது முடக்கத் தளா்வின் ஒரு பகுதியாக நவ.10 முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளைத் திறக்க மாநில அரசு அனுமதியளித்திருந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 25 திரையங்குகளில் 2 திரையரங்குகள் மட்டுமே செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திரையரங்குகளுக்கு வரும் பாா்வையாளா்களுக்கு உடல் வெப்பம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. திரையரங்கிற்குள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தனி மனித இடைவெளியுடன் திரைப்படம் பாா்க்கும் வகையில் இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனா்.
கிருஷ்ணகிரியில் உள்ள அரசு அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. ஆனாலும், குறைந்த எண்ணிக்கையிலான பாா்வையாளா்களே வந்திருந்தனா்.