கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மேலும் 14 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
அதன்படி கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஒசூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 3 பெண்கள், திருப்பத்தூரைச் சோ்ந்த 31 வயது ஆண் உள்பட மொத்தம் 14 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூரிலுள்ள சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 32 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா்; 312 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 6,894 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
முதியவா் உயிரிழப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 70 வயது முதியவா் நவ. 6-ஆம் தேதி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 7-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், அவா், நவ. 7-ஆம் தேதி உயிரிழந்தாா். இதுவரை, மாவட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 108-ஆக உயா்ந்துள்ளது.