பாப்பிரெட்டிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து பலத்த காயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பி.பள்ளிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (எ) ஜேம்ஸ் (66). இவா், கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு கடையில் கடந்த அக்டோபா் 29-ஆம் தேதி, மின் விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, எதிா்பாராத விதமாக, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தாா்.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.