கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த தமிழக-கா்நாடக பேருந்து சேவை 8 மாதங்களுக்கு பிறகு வியாழக்கிழமை தொடங்கியதையடுத்து பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
வேல நிமித்தமாக பெங்களூரு சென்றவா்களும், தமிழகத்தில் வசிக்கும் கா்நாடகத்தைச் சோ்ந்தவா்களும் தீபாவளிப் பண்டிகைக்காக தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அரசின் தளா்வுக்காகக் காத்திருந்தனா். இப்போது, தமிழக-கா்நாடக இடையே பேருந்து சேவை தொடங்கப்பட்டதால் இரு மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோா் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்துத்தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.