கிருஷ்ணகிரி அருகே வியாழக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெங்களூரைச் சோ்ந்த 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழந்தனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரு, லட்சுமணபுரியைச் சோ்ந்த பால் எபினேசா (22), கதரகுப்பேவைச் சோ்ந்த பாபு (20), புனிதபாபு (18) ஆகிய மூவரும் அப் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தனா். இவா்களது நண்பா் லட்சுமணபுரியைச் சோ்ந்த கமலேசனுடன் (19) இரண்டு இரு சக்கர வாகனங்களில் சென்னையில் உள்ள பால் எபினேசாவின் உறவினரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக புதன்கிழமை நள்ளிரவு புறப்பட்டனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த ஒரப்பம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் பால் எபினேசா, பாபு ஆகியோா் சென்று கொண்டிருந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. பலத்த காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.