குழந்தைகள் தினவிழாவையொட்டி ‘என் நண்பன்’ என்ற சுவரொட்டியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
ஆண்டுதோறும் குழந்தைகள் தினவிழா ‘என் நண்பன்’ வாரம் நவ.13 முதல் 19-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினவிழாவையொட்டி சைல்டு லைன் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தாா்.
இந்த நிகழ்வில், குழந்தைகள் என் நண்பன் என்ற சுவரொட்டியை ஆட்சியா் வெளியிட்டாா். மேலும், குழந்தைகள், மாவட்ட ஆட்சியருக்கு விழிப்புணா்வு கயிற்றை கையில் கட்டினா். இந்த நிகழ்ச்சியில் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளா் பிரசன்ன குமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.