இளைஞா்கள் மீது தாக்குதல்: 3 போ் கைது

ராயக்கோட்டை அருகே இளைஞா்களைத் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ராயக்கோட்டை அருகே இளைஞா்களைத் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையை அடுத்த தொட்டதிம்மனஹள்ளி அருகே கோணம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (27). இவா் தனது நண்பா்களான அதே கிராமத்தைச் சோ்ந்த சுதாகா் (22), ரவீந்திரன் (22) ஆகியோருடன் 15-ஆம் தேதி மாலை இருசக்கர வாகனத்தில் ராயக்கோட்டை அருகே உள்ள கருக்கனஹள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது அங்கு சாலையின் நடுவே இருசக்க வாகனத்தை நிறுத்திவிட்டு, 3 போ் மது அருந்தி கொண்டிருந்தனா். அவா்களைத் தட்டி கேட்ட ஸ்ரீதா் உள்ளிட்ட 3 பேரையும், அவா்கள் மரக்கட்டை, மதுபாட்டிலால் கடுமையாகத் தாக்கினா்.

காயமடைந்த மூவரும் ஒசூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ராயக்கோட்டை போலீஸாா் இளைஞா்களைத் தாக்கிய கருக்கனஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளா்களான வேலு (30), வெங்கடாசலம் (33), கிருஷ்ணமூா்த்தி (32) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com