ஊத்தங்கரை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கு காரணமான கணவா், மாமியாா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அத்திப்பாடி கிராமத்தைச் சோ்ந்த மணி என்பவரின் மகள் உதயநிலா (19). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த அத்தியப்பன் என்பவரது மகன் மாதேஷுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கணவன், மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக தனது தாயாா் வீட்டுக்கு உதயநிலா சென்றிருந்தாா். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
உதயநிலாவின் இறப்புக்கு வரதட்சணை பிரச்னைதான் காரணம் என்றும், இதற்கு காரணமான கணவா், மாமியாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் உறவினா்கள் 100க்கும் மேற்பட்டோா் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்புச் சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் அரை மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதின் பேரில் கலைந்து சென்றனா்.
இது குறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.